
அறம் படத்தின் வழியாக சிறந்த இயக்குநர்கள் வரிசையில் இணைந்தவர் கோபி நயினார்.
சில ஆண்டுகளாக மீடியாக்களின் பார்வையில் படாமல் ஒதுங்கியிருந்தார். அதன் விளைவோ என்னவோ அவர் மீது கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷை மிரட்டுவதாக சொல்லப்படுகிறது.
விவரம் என்ன?
நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபிநயினார். அறத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐஸ்வர்யாராஜேஷை நாயகியாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்களுக்குப் பின்னர் படப்பிடிப்பை தொடரவில்லை. நின்றுவிட்டது.
கோபிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் என்பவருக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடு தடைக் கல்லாகிவிட்டது என்றார்கள். இதன் பின்னர் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார் கோபி.!
திடீரென, 2018 இல் தொடங்கப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் ரமேஷோடு சேர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது புகாரைத் தட்டி விட்டிருக்கிறார் இயக்குனர் கோபி.
என்னய்யா நடக்குது?.
அந்த பெண் சொல்வதென்ன?
” நான் அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மை. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.
அதன்பின் பலமுறை தேதிகள் கொடுத்துவிட்டுக் காத்திருந்ததுதான் மிச்சம். அவர்கள் படப்பிடிப்பு நடத்தவில்லை. இந்தப்படத்தால் மேலும் சில படங்களின் வாய்ப்புகளை இழந்ததுதான்நான் கண்ட பலன்.
இப்போதும் இந்தப்படத்தில் நடிக்க நான் தயார்.இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரிசையாகத் தேதி கொடுத்து வைத்திருக்கிறேன்.அதனால்,இன்னும் மூன்று மாதங்கள் கழித்து 2024 சனவரி மாதம் இந்தப்படத்துக்குத் தேதி தருகிறேன் “என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், அதை கோபி நயினார் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
உடனடியாகத் தேதி தரவேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்களாம்.பலவிதங்களில் அவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நான்காண்டுகளுக்கு முன் நின்று போன படத்தை வைத்துக்கொண்டு நடிகையை மிரட்டுவதா?
அறம் பட இயக்குநர் அறம் பிறழ்வதா?












