ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைஸ் மற்றும் இவெனியோ ஆர்ஜின் இணைந்து வழங்கும், ஆர்..சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.
“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது
இந்நிகழ்வினில் ,இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசுகையில் “ஒரு படத்தின் தரம் தெரிந்து தான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்து இருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்து இருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆக இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரம், கதை, திரைக்கதை என அனைத்தும் படத்தை மெருகேற்றியுள்ளது. படம் பார்த்த பின்னர் நான் கூறியது சரியென நீங்களும் கூறுவீர்கள். “என்றார் .அதை வழி மொழிவதைப்போல இயக்குநர் சந்துருவும் பேசினார்.
“எங்கள் படம் மார்ச் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தைத் தமிழில் வெளியிடப் போகும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், ஜிகே எம் .தமிழ்க் குமரனுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. படம் பார்த்துவிட்டு, உங்களுடைய கருத்தைக் கூறுங்கள். நன்றி”என்றார்

நடிகர் உபேந்திரா கூறியதாவது..,
“இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். “என்றார் .