திருமண மண்டபங்களில் மது அருந்தலாம்,விளையாட்டு அரங்குகளிலும் சரக்கு அடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
லம்பாக வருமானம் உயரும். ‘குடி ‘ உயர கோல் உயரும். அந்த காலத்திலேயே எப்படியெல்லாம் சிந்திச்சிருக்கானுக. டபிள் மீனிங் ஜித்தன்கள் . கல்யாண வீடுகளில் திருட்டுத் தனமாக தண்ணி அடிக்க அவசியமே இல்லை.பயந்து பயந்து குடிக்க வேணாம்.எவனும் குடிகாரன் என்று வய்ய மாட்டான்.அவனே போட்டிருக்கும்போது எப்படி அடுத்தவனை கட்டுப்படுத்துவான்.
கல்யாண வீட்டார்கள் தேங்காய்ப் பை கொடுப்பதற்கு பதிலாக குவார்ட்டர் , பீர் ரெண்டில் ஒன்னு கொடுத்து கவனிக்கலாம். கவுரவப்படுத்தலாம். வசதியானவர்கள் பாரின் பாட்டில் ட்ரிங்ஸ் பார்ட்டி நடத்தலாம். 1000 ரூபாய் மொய் செய்தால் ஒரு குவார்ட்டர் பை மொய் தொகை உயர உயர ஆப் ,புல் வரை கொடுக்கலாம்
அவ்வளவாக வசதி இல்லாதவர்கள் பந்தியில் உட்கார்ந்தவர்களுக்கு ஒரு பெக் டம்ளர்களில் ஊற்றலாம்.
கல்யாண ஊர்வலத்துக்கு முன்னதாகவே நாட்டு சரக்கு சப்ளை பண்ணினால் பலவிதமான குத்துப்பாடல்களுடன் சிறப்பு நடனங்களும் இடம் பெறக்கூடும்.
சம்பந்தி சண்டையில் பாட்டில்கள் வீசக்கூடாது என்கிற நிபந்தனை கட்டாயப்படுத்தப்படும்.
மணமக்களுக்கு கண்டிப்பாக ஒயின்தான் கொடுக்க வேண்டும் .சரக்கை ஊற்றி முதல் இரவுக்கு ஆப்பு அடித்துவிடக்கூடாது. பின் வருகிற வெளிநாட்டு ஒயின்கள் வழங்கலாம்.
- Chateau Lafite’s 1869
- Shipwrecked 1907 Heidsieck
- 1947 Cheval-Blanc
- Screaming Eagle Cabernet Sauvignon 1992 |
- Romanée-Conti 1945