கம்பாலாவை மையமாக வைத்து உருவாகும் ‘கரவாலி’ படத்தில் பிரஜ்வல் தேவராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரஜ்வல் தேவராஜ் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
‘அம்பி நீங்கே வயசாய்தோ’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த குருதத்தா கனிகா தனது புதிய படைப்பான ‘கரவாலி’ படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான போராட்டம் குறித்து இப்படம் பேசும் என்று அவர் மேலும் கூறினார். மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ள நடிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். குறிப்பாக ‘மகிஷா அவதாரத்தில்’ பிரஜ்வல் தேவராஜ் மிரட்டுகிறார்.
நமது கலாச்சாரம் மற்றும் மொழிகளில் விளைந்து வேரூன்றிய கதைகளை மக்களுக்கு சொல்வதற்காகவே தாம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக குருதத்தா கனிகா கூறினார்.
‘கரவாலி’ திரைப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்க, அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.