தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தவறாகப் பேசியதாக கூறி, நடிகர் விஷாலை சஸ்பென்ட் செய்வதாக தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில் முதலில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு சரியானதுதான் எனக் கோர்ட் கூறியிருந்த நிலையில், மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, “விஷால் மீது எடுக்கபட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் தானாக முன் வந்து ரத்து செய்ய வேண்டும். விஷால் கூறிய கருத்தை மிகைபடுத்தி புரிந்து கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு ஒரு நாள் கெடு விதிப்பதாக” உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே இன்று மாலை அவசரமாக தயாரிப்பாளர் சங்கக்கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது