கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில், மிஸ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் ‘டிரெயின்’.இப்படம்,ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், நாசர், ஸ்ருதி ஹாசன்,யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிஸ்கின் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.ஸ்ருதிஹாசன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்வி
நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசும்போது…
ஒரு தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் டிரெய்ன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்… ஆனால் இந்த படத்தின் டிரைலரை தற்போது திரையில் பார்த்த பிறகு தான் படமும் ஆங்கில படத்திற்கு நிகராக உள்ளது.. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உள்ளது..என் சட்டையை பார்த்து ஒருவர் கேட்டார்.. என்ன சார் சட்டையை மாற்றி போட்டுட்டீங்களா உள்ளே பக்கம் வெளியே இருக்க.. வெளி பக்கம் உள்ள இருக்கு.. நான் காரணமாக தான் இந்த சட்டை போட்டு வந்தேன்.. ஏனென்றால் எனது அடுத்த படம் உள்ளே வெளியே பார்ட் 2..இதை இந்த மேடையில் நான் சொல்ல காரணம் சில பேர் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுவார்கள்.. ஆனால் உள்ளே என்ன நினைக்கிறாரோ அதையே வெளியே வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் மிஷ்கின்..
எதை செய்தாலும் தைரியமாக உண்மையாக செய்வார் அவருக்கு தூக்கம் வந்தால் ஆடியோ லான்ச் மேடையில் கூட தூங்குவார்..ஒரு இயக்குனர் நடிகர் என்பதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக அவரை நான் ரசிப்பேன். இவரை போல ஒருவர் இருந்தார்.. தைரியமாக உண்மையை பேசும் அவர் நடிகவேள் எம் ஆர் ராதா. அவருக்கு இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. ஆனால் அவரைப் போல இவர் துப்பாக்கியை எடுத்து சுட்டு விடக்கூடாது..விஜய் சேதுபதியின் எல்லா படங்ககளையும் பார்ப்பேன்.. அவர் நடித்த விளம்பரங்கள் கூட பார்ப்பேன்.. சமீபத்தில் அவரது பேட்டி ஒன்று பார்த்தேன்.. அதில் அவரிடம் ஒரு கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும் போது… நான் தோல்வியை சந்தோஷமாக பார்ப்பேன்.. அது என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும்.. ஆனால் வெற்றியை பயமாக பார்ப்பேன்… இந்த ட்ரெயின் திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்…. அதை பார்த்து அவர் பயப்பட வேண்டும்.. ” இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில்,
நந்தலாலா கதை சொல்லும் போது தானு சாரை மீட் பண்ணினேன் ஆனா சாருக்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட், எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவன் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார். விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு. ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு .என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.விஜய் சேதுபதி. அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன். இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன்.
இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது. கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல, படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி











