சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். சினிமாபைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி, அவரது மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்படத்தயாரிப்பாளர் அசோக் குமார்.இதனால் பலரும் அன்பு செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து,தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனை வலைவீசி தேடி வருகின்றனர். அன்பு செழியன்ஆ ந்திரா, உள்ளிட்டவெளி மாநிலங்களில் தலைமறைவாக இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் விஜய் ஆண்டனி ,தேவயாணி , சீனு ராமசாமி, சுந்தர் சி, மனோபாலா, உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், திடீர் திருப்பமாக, முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் ஆகியோர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.