என்னதான் நடந்திருக்கும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே வீட்டில் 11 பேர் தங்களின் கண்களைக் கட்டிக்கொண்டு வெண்டிலேட்டரில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி இருக்கிறார்களா என்றால் என்ன கஷ்டமோ கவலையோ, அல்லது மிரட்டலோ?
தெரியவில்லை. நமது போலிஸ் புலிகள் துப்பறிந்து சொல்வார்களா எதற்கு சிரமம் போன உயிர் போனதுதான் என்று கேசை ஊத்தி மூடி விடுவார்கள்ள என்பது தெரியவில்லை.
வழக்கமாக காலையில் வாக்கிங் செல்கிற பக்கத்து வீட்டுக்காரர் வந்து பார்த்தபோதுதான் கொடுமை தாண்டவம் ஆடி இருப்பது தெரிய வந்திருக்கிறது.நான்கு ஆண்கள், மூன்று பெண்கள், நான்கு சிறுமிகள். குடும்பத்தலைவருக்கு பிளைவுட் கடை.!