கோவிலில் வைத்துத் தனது தங்கை கல்யாணியை கற்பழிக்க முயன்ற பூசாரியை 50 ஆண்டுகளுக்கு முன்னரே அடையாளமாக நிறுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பராசக்தி படத்தில் பக்தி பகல் வேஷமாகியதை தனது வலிமையான வசனத்தால் சுட்டிக்காட்டி திரை உலகில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்,நடிகர் திலகத்தை அடையாளம் காட்டிய படம். அந்த பொற்கால முதல்வர் இதோ…மருத்துவ மனையில்!
அவர் சுட்டிக்காட்டிய போலிப் பூசாரி நோய்டாவில்.!
அவன் பெயர் சுவாமி கன்யானந்த்.
சாமி கும்பிடவந்த பெண்ணை ஆசி வழங்குவதாகச் சொல்லி ஆலயத்தில் தலைமைப் பூசாரி என்பதால் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் .வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை அச்சுறுத்தி கற்பழித்திருக்கிறான்.வாழ வழி தெரியாத அந்தப் பெண் புகார் செய்ய தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ்.
பூசாரி எஸ்கேப்!