
அடுத்தவனின் மூளையை சுரண்டி ‘சொந்தக்கதை’என பெயர் வாங்குவதை விட ‘ரீமேக் ‘பண்ணி காசு பார்ப்பது ஒரு பாஃர்முலா.’ஜானி கட்டார்’ இந்திப்படம்தான் இந்த ஜானிக்கு ஆதாரம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரசாந்த் சேதாரம் வைக்காமல் தங்க ஆரமாக மின்னுகிறார். பிரபு தலைமையில் ஒரு கேங்க்.பிரசாந்த்,ஆனந்தராஜ்,அசுதோஷ் ராணா,ஆத்மா பேட்ரிக்,உள்ளிட்ட ஐவர் அணி கூட்டாக சூதாட்ட கிளப் நடத்துகிறது. மும்பையை சேர்ந்த ஷாயாஜி ஷிண்டேயிடம் சிக்கிய போதைப் பொருளை இரண்டரை கோடி கொடுத்து வாங்கினால் லம்ப்பாக பெரும் பணத்துக்கு விற்று பங்கிட்டுக் கொள்ளலாம் என பிரபு சொன்ன யோசனையை ஏற்று ஆளுக்கு ஐம்பது லட்சம் போட்டு அசுதோஷிடம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
இவர் கொண்டு செல்லும் இரண்டரை கோடியை கைப்பற்றிக்கொண்டு காதலி சஞ்சிதா ஷெட்டியுடன் கனடாவில் செட்டில் ஆவது என்பது பிரசாந்த் திட்டம். அது நடந்ததா இல்லையா என்பதை அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் எப்படி சொல்லியிருக்கிறார்? தயாரிப்பாளர் தியாகராஜன் வழி காட்டுதல் சிறப்பு.
சேலம் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் தன் பெயரை ஜானி என்று மாற்றி சொன்னதுதான்கதையின் டைட்டிலாகி இருக்கிறது.பிரசாந்தின் கிரைம் மூளையை கூட்டாளிக்குஅம்பலபடுத்துவது இந்த பெயர்தான்.!
மிஸ்டர் ஆணழகன் என்று சொல்லும் அளவுக்கு பாடியை வைத்திருக்கிற பிரசாந்தை இந்த படம் “அடுத்த படம் எப்ப ?” என கேட்க சொல்கிறது. ஏப்ரலில் வருவாராம்.தியாகராஜன் சொன்னார்.
தொழில் கூட்டாளிகளை ஒவ்வொருவராக போட்டுத் தள்ள போடுகிற திட்டத்துக்கு இரண்டாவது பலி பிரபு. மிரட்டல் உருட்டல் கனிவு நிறைந்த கேரக்டர் .
குறை சொல்ல முடியவில்லை. காமடி இல்லையே என்கிற குறையை போக்குகிறார் ஆனந்தராஜ்.
ஈவு இரக்கமற்ற சாயாஷி ஷிண்டே சூப்பர். நாயகி சஞ்சிதா ஷெட்டி ‘கிளிவேஜ்’காட்டி இருக்கிறார்.
தேவதர்ஷினியின் நடிப்பு இந்த படத்தில்தான் உருக வைத்திருக்கிறது.
முதல் பாதியின் வேகம் பிற்பாதியில் இல்லை என்றாலும் பன்னீர்செல்வம் ஒளிப்பதிவும் ஜெய்கணேஷின் இசையும் படத்துக்கு பக்க பலம்.












