அரசியலில் அணைக்கட்டு தண்ணீர் வற்றி விடாமல் பாதுகாப்பதற்கு தெர்மகோல் விடுகிற புத்திசாலி உள்ள நாடுங்க நம்ம தமிழ்நாடு.!
சில மந்திரிகள் அளவுக்கு அவ்வளவாக நடிகர்கள் மக்குகளாக இல்லை என்பது மகிழ்ச்சி. ஆனா சில நடிகர்கள் ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி மாதிரி.!வலிக்காமல் ஆழமாக அறுத்து விடுவார்கள். யாரை நையாண்டி பண்ணுகிறார்கள் என்பது சொல்லும்போது தெரியாது. யோசித்துப்பார்த்தால் தெரிந்து விடும்.
குப்பத்து ராஜா படத்தில் எம்.ஜி.ராஜேந்திரன் என்கிற கேரக்டரில் பார்த்தீபன். புஷ்குல்லா தொப்பி,கழுத்தில் எம்.ஜி.ஆர் .டாலர்.விரலில் அப்பளம் சைசுக்கு மோதிரம் என்று அதிரி புதிரியாக வருகிறார்.
படத்தின் முன்னோட்டக்காட்சியில் தொட்டும் தொடாமலும் சில காட்சிகள் யாரையோ குத்துவது மாதிரி…
“ஒருதபாதான் சொல்வேன் ஒவ்வொரு தபாவும் சொல்லிட்டிருக்கமாட்டேன்.” இந்த வசனத்தைக் கேட்டுப்பாருங்கள் ,யாரை நினைவு படுத்துகிறார் என்பது புரியும்.
சரி இந்த மாதிரி எம்.ஜி.ஆர்.கெட்டப்பில் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தாராம்?
“தொப்பியை தலையில வைக்கணுமா வேணாமான்னு ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. எனக்கு விஜயகாந்த் அண்ணன் மாதிரி. அவரை கருப்பு எம்.ஜி.ஆர்.னு சொன்னபோது கேலி செய்தாங்க.அத மாதிரி ஆகிடக்கூடாதுன்னு பயம் இருந்தது..ஆனா என்னுடைய கேரக்டர் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாமல் இருந்தது” என்று சொன்ன பார்த்தீபன் இன்னொரு முக்கியமான செய்தியையும் சொன்னார்.
“ஆமீர்கானுடன் முக்கியமான விஷயத்துக்காக அவருடன் பேச இருக்கிறேன்.விரைவில் அது சேதியாக இருக்கும்” என்றார்.
அவரது ஒத்த செருப்பு படம் தொடர்பாக இருக்கலாமோ!