கதை,வசனம் ,இயக்கம் : ஜெகதீசன் சுபு ,ஒளிப்பதிவு :ஜி.கே.விஷ்ணு. இசை : டி.இமான்,
விக்ராந்த்சந்தோஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,வசுந்தரா கஷ்யப் ,ஒட்டகம் சாரா.
*************
சின்னஏமாத்தம்தான்.!
விவசாயி கடன், வங்கி கடன் ,அண்ணன் தம்பி பிரச்னைன்னு ஆரம்பமாகுதே, வழக்கம் போல கடன் தொல்லை.அண்ணன் தம்பி குட்டு வெட்டு, ஜப்தின்னு கொண்டு போயிருவாரோ டைரக்டர் ஜெகதீசன் சுபுன்னு குப்புன்னு மனசுல வேர்த்தது…
ஆனா கதை போற போக்கில அதெல்லாம் இல்லாம நல்லாவே போகுது. ஆறுதலாக இருந்தது. அது மட்டுமா கடன் வாங்க போன பாய் வீட்டில கிடைச்சது கடன் மட்டுமில்ல கூடவே இலவசமா ஒரு ஒட்டகமும்தான் என்கிறபோது முஸ்லிம்கள் மீதான சினிமாப் பார்வையில் ஒரு மாறுதலும் தெரியிது. நிலையானதாங்கிறதெல்லாம் கால மாறுதலைப் பொருத்து.!
நீண்ட வருஷ இழுப்புக்குப் பிறகு கிடைத்த நிலம், நல்ல முறையில் கிடைத்த கடன், சிறந்த விவசாயம்னு போன விக்ராந்த் -வசுந்தரா வாழ்க்கையில் அன்பளிப்பாக கிடைத்த ஓட்டகக் குட்டியினால் பிரச்னை.
“ராஜஸ்தான்ல ,அந்த கிளைமேட்டுக்கு,அங்க கிடைக்கிற புல்லு பூண்டை திங்கிற ஒட்டகத்தை அதுவும் ஆம்பள ஒட்டகத்தை ( ஆனா சாரான்னு பொண்ணு பேரு.) இங்க வளத்தா நிக்குமா,போய் ராஜஸ்தான்ல கொண்டு விட்ரு” என்று கால்நடை டாக்டர் எம்.எஸ்.பாஸ்கர் சொன்னதுதான் பின்னால இழுபடுற கதைக்குக் காரணம்.
சிவாஜியின் பேரைச் சொல்லி வெறியாட்டம் போடுற காவிக் கொடி ஆளுங்களையும் அதுக்கு சப்போர்ட்டா இருக்கிற மகாராஷ்டிர போலீஸ் துறையையும் காட்சிகளினாலேயே குத்திக் கிழிச்சிருக்காங்க.வெல்டன் டைரக்டர் ஐயா!
தளபதியின் தம்பி விக்ராந்துக்கு இந்தப்படம்தான் எனர்ஜி பூஸ்டர்.மனைவி,குழந்தை,ஒட்டகம் மீதான் பாசம் இயல்பாக இருக்கு. பொருத்தமாக இருக்கிறார் வசுந்தரா.
ஆனா பக்ரீத் பண்டிகைக்கு வந்த ஒட்டகம் எதுக்காக வந்திருக்கும்னு (பாயே பிரியாணிதான்னு சொல்லிட்டார்.) தெரிஞ்சிருந்தும் குட்டி ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கு ஓட்டிட்டு போன விக்ராந்த்,டாக்டர் எம்.எஸ் பாஸ்கர் சொன்னதை மறந்திட்டு அந்த வாயில்லா ஜீவனை கூட்டிட்டு வந்தது ஆண் ஒட்டகத்துக்கு செஞ்ச பாவமில்லையா!
தமிழ்நாடு என்றாலே வடக்கத்தியர்களுக்கு குறிப்பா போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு எவ்வளவு காண்டுன்னு நல்லாவே தெரியிது.
இயக்குநரே ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிகளின் தன்மைக்கேற்ப கேமராவை ஓட விட்டிருக்கிறார். ஆனா ஒட்டகம்-விக்ராந்த் பாசப்போருக்காக கதையை வேணும்னே இழுத்திருக்கிறார்.குறைகள் இல்லாமல் படமும் இல்ல.
இசை டி.இமானாம்.!ரெண்டுக்கு ஒண்ணு பழுதில்ல!
சினிமா முரசம் மார்க் 2 / 5