கட்டிப்பிடி வைத்தியத்தை தமிழகத்தில் பிரபலப் படுத்தியதில் மக்கள் நீதி மய்யத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் சினேகனுக்கு முக்கிய இடம் உண்டு.
இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் சொந்தமாக படம் எடுத்ததில்லை.
அந்த குறை இருப்பானேன் என தற்போது தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறார்.
கட்டைக் கூத்துக் கலையை அடிப்படையாகக்கொண்டு மண் வாசனை மிகுந்த திரைப்படத்தை எடுக்கிறார். இயக்குநர் அமீர்,இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தொடக்கவிழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் பாக்யராஜ்,ஊர்வசி,சிங்கம்புலி,இ.ராமதாஸ் உள்ளிட்ட 19 பிரபலங்கள் நடிக்கிறார்கள். படத்துக்குப் பெயர் பொம்மி வீரன்,