பராசக்தியில் நாயகனாக நடித்து ஒரே படத்தில் உச்சம் சென்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.!
உச்சத்தில் இருக்கும்போதே பெண் பித்தன் பரந்தாமனாக வில்லன் கேரக்டரில் பின்னி எடுத்தார்.
“பரந்தாமா . உனக்கு இப்போது ஒரு பெண்தானே வேண்டும் எடுத்துக் கொள்” என்று அக்காவாக நடித்த பண்டரிபாய் தன்னையே தர முன் வந்தபோது சிவாஜி கதறி அழுது கலைஞரின் வசனத்தைப் பேசிய போது தியேட்டரே கண்ணீர் விட்டது.
ஆனாலும் கதாநாயகன் வில்லனாகியதையும் ஜோடியாக நடித்த பண்டரிபாய் சகோதரியாகியதையும் அன்றைய ரசிகர்கள் ஏற்கவில்லை.
ஆனால் காலம் மாறி வருகிறது.ரசனை வேறு விதமாகிவிட்டது. முரட்டுக்குத்தை கல்லூரி மாணவர்களே ரசிக்கிறார்கள் .
தமிழகத்தில் இன்று முன்னணி இடத்தில் தல அஜித்,தளபதி விஜய் ,மக்கள் செல்வன் விஜயசேதுபதி ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.
இவர்களில் சேதுபதி பாலிவுட்டில் வில்லனாக நடித்து அமிர்கானின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். ஆந்திராவின் ‘மாக்னம் ஓபஸ் ‘படமான சைராவிலும் முக்கிய வேடத்தில் நடித்து சிரஞ்சீவியின் வாழ்த்தினைப் பெற்று விட்டார். கேரளத்திலும் நடித்து கலக்கி விட்டார்.
ஒரு கலைஞன் எந்த கதாபாத்திரத்துக்குள்ளும் தன்னை பொருத்திக் கொள்ள வேண்டும் என்பது ஆண்மை.!
அந்த வகையில் தளபதி விஜய்யின் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜயசேதுபதி ஒப்புக் கொண்டிருக்கிறார். 20 நாள் கால்ஷீட்.
நடிப்பில் போட்டியிட்டு தங்களின் வலிமையைக் காட்ட இருவருக்குமே இது நல்ல வாய்ப்பு.!