இன்று மாலை சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு விழா நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். விழாவில் பாஜக பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். விழாவில் குறிப்பிட்ட பத்திரிகைகள் டி .வி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.புகைப்படக்காரர்களுக்கும் கட்டுப்பாடு . ஆனால் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களின் கடமை பற்றிபேசியதுதான் வேடிக்கையாக இருந்தது. உண்மையை எழுத சொன்னார். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது.
“சோ சார் ஒரு ஜீனியஸ், ஜீனியஸ்கள் வளர்ப்பால் உருவாவதில்லை, அவர்கள் ஜீனியஸாக பிறப்பார்கள். அவர்களை அடையாளப்படுத்த நாளாகும். அவர்கள் துறைகளை தேர்வு செய்வார்கள். அதற்கு காலமாகும் ஆனால் செயல்படுத்தி சாதிப்பார்கள். அப்படி ஒரு ஜீனியஸ்தான் சோ. அவர் எடுத்த துறை பத்திரிக்கைத்துறை. அதில் அவர் எழுதிய அரசியல், நையாண்டி என ஒரு துக்ளக்கையே உருவாக்கினார். முரசொலி வைத்திருந்தால் அவன் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி.”என திமுகவையும் சைடு குத்தாக குத்தி வைத்தார்.
முரசொலி என்பது திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடு. அதை திமுக காரன் வைத்திருப்பது இயல்புதானே.!