முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு இன்னும் குறைந்தபாடாக இல்லை. முரசொலியில் முழ நீள கட்டுரை.உதயநிதி ஸ்டாலினின் நையாண்டி குத்தல். கெளுத்தி மீனை விழுங்கிய நாரை போலாகி இருக்கிறார் ரஜினி.
இந்த பத்திரிகையாளர்களும் பேட்டி காணும் பிரபலங்களின் வாயைக் கிளறி வம்பை வளர்த்து விடுகிறார்கள்.
அறிவாலயத்துக்கு தன்னிலை விளக்கம் சொல்ல வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் ரஜினியின் துக்ளக் -முரசொலி பற்றிய பேச்சைப் பற்றி கேட்டிருக்கிறார்கள்.
அவரும் “ரஜினி அப்படி பேசியது தப்புதான் .எதோ வாய் தவறி பேசிட்டார் .விட்ருங்க” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிவிட்டார்.எச்சரிக்கையான தலைவர். திமுக வை விட்டு விலகினால் நாளைக்கு ரஜினியின் தோளில் உட்காரமுடியுமே.!