
சீனாவைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள உகான் நகரில் சிக்கிய 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் சீனாவின் வுகான் பகுதியில் இருந்து 323 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இவ் விமானத்தில் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.