
“நல்லதே நடக்கும் என்றில்லாமல் நல்லதையே நடக்க வைப்போம் என்ற சிந்தனையுடன் செயல்படுவோம்.”என்று அன்றே தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னவர் கமல்ஹாசன்..
இதுமட்டுமல்ல .அன்று தன்னுடைய ரசிகர்களுக்கு “தேடித் தீர்ப்போம் வா” என்று அறவுரை சொன்ன கமல்ஹாசன் இன்னொன்றையும் அழுத்தமுடன் சொன்னார்.
“பரந்த பாரதம் சதுர்வர்ணம் பூண்டு மீண்டும் ஒரு ஈஸ்ட் இண்டியா கம்பெனி வேறு ரூபத்தில் வந்து கற்பழிக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதானா?ஜாதியே வேண்டாம் என்று சொல்லப்போகும் அரசியல்வாதியை இனி நாங்கள் சந்திக்கவே முடியாதா?” என்று இந்த சமுதாயத்தைக் கேட்டவர்தான் கமல்.
கோவை தெற்குத் தொகுதி மக்கள் மட்டுமின்றி தங்களின் அணிக்கு அளித்த ஆதரவுக்கு எல்லா மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.












