
‘அறம் ‘பட நடிகையின் வாழ்க்கையில் சமூக நீதி ,நியாயம் என சொல்லப்படுகிற விதிகள் மதிக்கப்பட்டனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சமூகம் சார்ந்த நியதிகளை மீறியவர் என்று சொல்லப்பட்டாலும் நயன் இன்றளவும் பெரும்பான்மையான ரசிகர்களால் வரவேற்கப்படுகிறார். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என பாராட்டப்படுகிறார் என்று சொன்னாலும் , போற்றப்படுகிறார் என்று சொல்வதும் சரியே யாகும்.!
அண்மையில் “இரட்டைக்குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகிவிட்டோம் ,ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் .இரண்டுமே ஆண் குழந்தைகள்.”என டிவிட்டர் வழியாக அறிவித்தார் விக்னேஷ் சிவன். வாடகைத்தாய் வழியாக அவர்கள் அந்த குழந்தைகளை “பெற்றிருக்கிறார்கள்” மனைவி நயன்தாரா கருவுற்று அவர் வழியாக இந்த இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பெண் பெற்ற அந்த குழந்தைகளை ‘பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்’
இந்த வழியை சிலர் பின்பற்றிவந்தாலும் இந்திய துணைக்கண்டத்தில் அதற்கு போதிய ஆதரவு இருக்கவில்லை. ‘கன்வென்ஷனல் மெத்தடு “என கருதப்படவில்லை.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பல ஆண்டுகளாக ,சேர்ந்தே ‘லீவ் இந்த ரிலேசன் ‘ஆக தம்பதியராக வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாடுகளுக்கு கணவன் மனைவியைப்போல சேர்ந்தே சென்று அனுபவித்திருக்கிறார்கள். அவ்வப்போது போட்டோக்களும் அவர்களே கொடுத்தார்கள்.
சிலம்பரசன்,பிரபுதேவா ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரிந்து வந்ததைப்போல நயன் பிரிந்து விடாமல் இந்த ஆண்டு பகிரங்கமாக ,கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
கன்வென்ஷன்களை உடைத்துக்கொண்டு நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் என்பதை நாடறியும்.!2011 -ல் “இனிமேல் நடிக்க மாட்டேன் “என்று சினிமாவை விட்டு வெளியேறியவர் நயன். ஆனால் 2013 — நடிக்க வந்து விட்டாரே! 11 மாத காலமாக ‘சுயமாக வெளியேறியவர் ‘அந்த வாழ்க்கை பிடிக்காமல் திரும்பவும் வந்து விட்டார்.
“நான் என்ன நினைக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளாத உலகத்தை விரும்பவில்லை”என்று மீடியாக்களை அறவே புறக்கணித்து விட்டார்.
“நான் மிகவும் பிரைவேட் பெர்சன்.கூட்டங்களை விரும்பவில்லை.”என்று மீடியாக்களை தனது திருமணத்துக்குக்கூட அழைக்காதவர்தான் இந்த நயன்தாரா!
இவரை வலிமையான மீடியாவினால் வெல்ல முடிந்ததா ? இல்லை !
பேட்டிக்காக இன்றும் அலைந்துகொண்டுதானிருக்கிறது.!












