
ரஜினிகாந்த் ,ஜோதிகா, நயன்தாரா ,வடிவேலு நடித்து பி. வாசு இயக்கத்தில் முன்பு வெளியாகிய சந்திரமுகி சக்கை போடு போட்டு பட்டையை கிளப்பியிருந்தது.
அதனுடைய இரண்டாம் பகுதியாக அதே. பி. வாசு இயக்கியிருக்கிற ‘சந்திரமுகி.2’ தற்போது வெளியாகியிருக்கிறது. லைகாவின் தயாரிப்பு என்பதால் செல்வ, செழிப்புடன் வளர்ந்திருக்கிறது. சுபாஸ்கரன் தயங்காமல் செலவு செய்திருக்கிறார். படத்தில் மினு மினுப்பு அதிகம். ! சரி , படம் எப்படி?
மில் ஓனர் ராதிகா குடும்பத்தில் அடுத்தடுத்து கெட்ட காரியங்கள் . பட்ட காலிலேயே படும் என்பதைப்போல மில்லில் தீ விபத்து. குடும்பத்து ஜோதிடர் குலதெய்வம் குடும்பத்துக் கோவிலுக்கு சென்று வரச் சொல்கிறார் .வேறு மதத்தில் கல்யாணம் செய்து கொண்ட மூத்த மகளின் பிள்ளைகளும் செல்ல வேண்டும் என்பது அந்த ஜோதிடரின் கட்டளை.
வேண்டா வெறுப்பாக அவர்களையும் அழைத்துக்கொண்டு போகிறார்கள். குழந்தைகளின் கார்டியன் ராகவா லாரான்சும் கூடவே போகிறார். போன இடத்தில் சந்திரமுகியின் மாளிகையில் தங்குகிறார்கள். அந்த மாளிகைக்கு ஓனர் வடிவேலு.
ராதிகா குடும்பத்தினரால் சாமி கும்பிட முடிந்ததா ,அமானுஷ்யம் நிறைந்த அந்த மாளிகையில் எப்படி தாக்குப் பிடித்தார்கள் என்பதை இயக்குநர் பி. வாசு அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். 
ரஜினிகாந்தின் விசுவாசி ராகவா லாரன்ஸ் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக வடிவேலுவுடன் அவர் வருகிற காட்சிகளில் ரஜினியின் பிம்பமாக இருக்கிறார். வடிவேலு ,ராகவா லாரன்ஸ் இருவரும் பார்வையாளர்களை கவருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
ஜோதிகாவின் கேரக்டரில் தலைவி நடிகை கங்கணா ரணாவத் . சிறப்பு சேர்த்திருக்கிறார்.படு ஸ்டைலாக ஒரு நடை நடப்பார் பாருங்கள் ,வாலிபர்களை வாரி சுருட்டி இடுப்பில் சொருகிக் கொள்கிறார் !
கதிரறுப்பு கூட்டம் படம் முழுவதும் ஜே… ஜே வென இருக்கிறது
லட்சுமிமேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே,சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோரில் கூடுதலாக மார்க் எடுப்பவர் லட்சுமி மேனன். வீல் சேரில் இருக்கிற லட்சுமி மேனன் ஆவி புகுந்தபின்னர் அந்தரத்தில் சுழன்று..! அடேங்கப்பா ஒளிப்பதிவாளர் ஆர். டி . ராஜசேகர் சூப்பர் சார்.!
.எம்.எம்.கீரவாணி இசையில் ஸ்வாகாதஞ்சலி, ரா ரா ஆகிய பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. மற்ற பாடல்களும் முதல்பாகத்தின் பாடல்களை நினைவுபடுத்துகின்றன
படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தைத் தொகுக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.தோட்டாதரணியில் கலை இயக்கம் நன்று.
முதல்பாகத்தில் மனிதர்களாக இருந்தவர்களை இந்த பாகத்தில் ஆவிகளாக மாற்றி பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பி . வாசு.
பாருங்கள் ,ரசியுங்கள் !












