காதலுக்கு விளக்கவுரை ,பொழிப்புரை,கருத்துரை என எத்தனையோ பேர் சொல்லிச் சென்றிருந்தாலும் சினிமாக்காரர்கள் சொல்கிற உரை ஒவ்வொன்றும் புதுசாகவே இருக்கும்.
ஒரு காதல் போனால் என்னய்யா ,இன்னொரு காதலை ஏற்படுத்திக்கோ என்கிறார் ‘ஜோ’வின் இயக்குநர் ஹரிகரன் ராம் . “அநியாயமா தெரியலயா ,?”என்பவர்க்கு “இதுவும் நியாயம்தான் ” என காட்சிகளில் வலுவேற்றி காட்டி இருக்கிறார்.
கல்லூரி காதல். நம்ம ரியோ ராஜ் சக மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். சிக்கல் இல்லாமல் காதலா ?காதல் என்றாலே விவகாரமும் ஒட்டியிருக்கும் என்பதுதானே இயல்பு. நம்ம நாயகனுக்கும் எதிர்ப்பு. இதனால் தேவதாசாக மாறப் பார்க்கிறார் .அப்படி ஏடாகூட தாசாகி விடக்கூடாது என்று பவியா டிரிக்காவை கட்டி வைக்கிறார்கள். ஆனாலும் சிக்கல் தீரவில்லை. துயரமே துரத்துகிறது. அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது கதை.
ரியோ ராஜ் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். வெள்ளித்திரையில் வெற்றிநாயகனாக வலம் வரவேண்டும் என்கிற உந்துதல் அவரை கதையில் வாழ வைத்திருக்கிறது. ரியோராஜ் வாய்ப்புகள் வரலாம்.
மாளவிகா நம்மை கவர்ந்து பின்பு கலங்கவும் வைத்துவிடுகிறார்.
மனைவியாக நடித்திருப்பவர் பவ்யா ட்ரிக்கா . இவருடைய கண்கள் பெரும்பலம்.
சார்லி. அன்புதாசன், ஏகன்,இளங்கோ குமணன் என பலர் கதைக்கு பலமாக இருக்கிறார்கள்.
சித்துகுமாரின் இசை, ராகுல் கே.ஜி.விக்னேஷின் ஒளிப்பதிவு ,வருண் கே.ஜி யின் படத்தொகுப்பு என கதைக்கு பக்க பலமாக இருக்கின்றன .
இயக்குநர் ஹரிஹரன்ராம் , நாயகன் ரியோராஜ் இருவரது உழைப்பும் மதிக்கப் படவேண்டும். என்பது நமது கவலை.!
–தேவிமணி