
“இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிட்டுள்ளோம். ‘ரிச்சி’ என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார். வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் ‘ரிச்சி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்” என்கிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.