பெங்களூருவில் வசிக்கும் தமிழ்க்குடும்பம் (அஜய்)ஆதி,(அபிநய)ஆதிரா தம்பதியின் மகள் பூமிகா( சைதன்யா). இவள் பள்ளி செல்லும் வழியில் காமகொடூரன் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி குற்றுயிரும் குலையுருமாக கிடக்கிறாள்.அவளின் கதி என்னவானது?காமக் கொடூரன் கைது செய்யப்பட் டானா?இல்லையா? அவனுக்கு தண்டனை கிடைத்ததா,இல்லையா? என்பது தான் இப்படத்தின் அழுத்தமான கதைக்களமாக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஓவ்வொரு பெற்றோரும் இப்படத்தை நிம்மதியாய் பார்த்து விட முடியாது, நம்மை கலங்கடித்து விடுகிறது பல காட்சிகள்.பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் கொடுரத்தை அன்றாடம் செய்திகளாய் நாம் படித்து விட்டு,பள்ளிக்கு சென்றுவிட்டு நம் குழந்தைகள் வீடு திரும்பும் வரை அதன் பாதுகாப்பை நினைத்து வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு அலையும் இக்காலக்கட்டத்தில் , இப்படி யொரு படம் நம் மனதில் இனம் புரியாத தாக்கத்தை நம் மனதில் நிலையாக ஏற்படுத்தி விடுகிறது.என்பதை மறுப்பதற்கில்லை,இன்றைய இளைஞர்களை மது எனும் அரக்கனுக்கு அடிமையாக்கிவிட்டு அதன் வருவாயை மட்டுமே நம்பி, ஆட்சி நடத்தும் பல மாநிலஅரசுகளுக்கு நீதித் துறையின் மூலம் சரியான சவுக்கடியை கொடுத்துள்ளார் இயக்குனர் மைக்கேல் அருண். என்றாலும் பால் மனம் மாறாத அந்த குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக சிதைத்த அக் காம கொடூரனுக்கு சட்டம் எத்தகைய பாதுகாப்பையும் கொடுக்கிறது என்பதையும் இப்படம் சுட்டிக்காட்ட தயங்க வில்லை . அச் சம்பவத்துக்கு பின்னர் அக் குழந்தையின் மனநிலை, செயல் பாடுகள் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதையும் காட்சிப் படுத்தியிருப்பது அருமை. அப்பா -மகள் பாசத்தை மிக அழகாக வெளிபடுத்தியுள்ளார் இயக்குனர். க ன்னடத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அழுத்தமான திரைக்கதையால் நம் மனதில் நிசப்தம் குடிகொண்டு விடுகிறது. முற்பாதியில், காட்சிகளில் இயக்குனர் இன்னும்கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிசப்தம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.