
“என்னடா இது ஜனநாயகனுக்கு வந்த சோதனை ?”
இப்படியாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்களாம். இன்னும் சில நாட்களே இருக்கிற நிலையில் வெளியீட்டுக்கு முன்னதாக புதிய நெருக்கடி !
ஜனநாயகன் ஜனவரி 9 -ல் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டபோது ஒரு திரை அரங்கம் அட்வான்சாக இருபது லட்சம் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கேட்டதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற பெரியபடங்கள் வரும்போது ,திரையரங்குக்காரர்களிடம் விநியோகஸ்தர்கள் முன்பணம் பெறுவது வழக்கம்.அவர்கள் கொடுக்கிற தொகையைத் தாண்டி வசூலானால் மீதித் தொகையை விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பார்கள்,ஒருவேளை முடிவு மாறிவிட்டால்,வசூலான தொகை போக மீதியை விநியோகஸ்தர்கள் திரையரங்கினருக்குக் கொடுக்கவேண்டும்.
இப்போது கூடுதலாக ஐந்து லட்சம் கேட்கிறார் விநியோகஸ்தர்.
இருபதுதானே முன்பு கேட்டீர்கள் அதும் தருகிறோம் என்று சொன்ன நிலையில் தற்போது மேலும் அதிகமாக ஐந்து லட்சம் கேட்டால் எங்கள் நிலை என்னாவது என்று தியேட்டர் அதிபர்கள் வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் விநியோகஸ்தர் தரப்பு ஐந்து லட்சம் கொடுத்தால் படம் தருவோம் என்று உறுதியாக சொல்லிவிட்டதால் கை பிசைந்து நிற்கிறதாம் தியேட்டர் அதிபர்கள் தரப்பு. ஐந்து லட்சம் என்பது பெரிய தொகை இல்லைதான் என்றாலும் கடேசி நேரத்தில் நெருக்கடி தருவது நல்லதல்ல என்பது பொதுக்கருத்து.
தற்போது படத்தின் நாயகன் முதலமைச்சர் என்பதால் த.வெ.க. கட்சிக்காரர்களே எல்லா சீட்டுகளையும் வாங்கிக் கொள்வார்கள்,எனவே,முன்பு பேசியதைவிட கூடுதலாக ஐந்து இலட்சம் கொடுத்தால் படம் தருகிறோம் இல்லையெனில் உங்களுக்குப் படமில்லை என்று சொல்கிறார்களாம்.
என்ன செய்வது தாலி கட்டிக்கொண்டாகிவிட்டது.,புருஷன் சொல்வதை எல்லாம் கேட்டாகத்தான் வேண்டும்.!












