
இசை – யுவன் சங்கர் ராஜா ,பாடல்கள் – பா .விஜய் , விவேகா
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம் ,படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்
கலை – எம். .முருகன் ,நடனம் – ராஜு சுந்தரம் ,சண்டை பயிற்சி – பிரதீப்
கலை – எம். .முருகன் ,நடனம் – ராஜு சுந்தரம் ,சண்டை பயிற்சி – பிரதீப்
ஜீவா ,அருள்நிதி, மஞ்சிமா மோகன் , பிரியா பவானி ,டத்தோ ராதாரவி , ரோபோசங்கர் , பால சரவணன், இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேல.ராமமூர்த்தி ,ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ.
கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம் என்..ராஜசேகர் ,தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் – ஆர் .அசோக்
*************
தியேட்டருக்கு வந்தமா, கலகலன்னு சிரிச்சமா ,ஜாலியா இருந்தமா ,நிம்மதியா வீட்டுக்குப் போனமா ,பொண்டாட்டியோட கொஞ்சி வெளையாண்டமான்னு இருக்கணும் .அதுதான் ஜனரஞ்சகமான சினிமான்னு சொல்லுவாய்ங்க.!
அந்த எபெக்ட் களத்தில் சந்திப்போம் படத்தில இருக்கா?.
படம் ஆரம்பிச்சதுமே கபடி..கபடின்னு அருள்நிதியையும் ஜீவாவையும் கிரவுண்ட்ல பார்த்ததும் கொஞ்சம் கப்புன்னு நெஞ்சை பிடிச்சது என்னவோ உண்மைதான். ஆனா அதுதான் கதையில்ல ,இது வேறங்கிறது போக போகத்தான் தெரியுது .
டைரக்டர் என்.ராஜசேகர் டைரக்டர் எழிலின் சீடராம் .மொதல் படம். மொக்க போடாம கதையை காரைக்குடியில் ரவுண்டு கட்டி கொண்டு போயிருக்காரு. சில பல சீன் புதுசு இல்லேன்னாலும் மோசமில்லை.

வசனம் எழுதுன ஆர். அசோக் பக்க பலம். அதிலும் ஜீவாவுக்குன்னே எழுதுனதெல்லாம் மாடுலேஷன்ல தியேட்டரை தூக்குது. ஜீவாவுக்கே இது புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ஆளும் அம்சமாத்தான் இருக்கார்.
என்னதான் அருள்நிதிக்கும் மஞ்சிமாவுக்கும் ஜீவா கனெக்சன் கொடுக்கப் பார்த்தாலும் அந்த சிட்டு அவருக்குத்தாங்கிறது கதை போற போக்கிலேயே தெரிஞ்சிபோகுது. சஸ்பென்ஸ் வைக்கிறதுக்கு திரைக்கதையில் வழியில்ல .
அருள்நிதி ஏன் பார்க்கிற பெண்களையெல்லாம் வேணாம்னு சொல்றார் என்பதுக்கு வலுவான காரணம் இல்ல. காதலிச்ச பொண்ணு வேற மதம் ,கல்யாணம் பண்ணிட்டு போயிட்டதால இவர் மனசுக்குள்ள மருகிட்டு இருக்கிறார் என்பதெல்லாம் பழசுதான்.! ஆனா இந்த கதை அருள்நிதியை ரொம்பவே மாத்தியிருக்கு. தேவையான மாற்றம்.
கதையில் புதுமை ,புரட்சின்னு எதுவும் இல்ல ,கதையில் பல சம்பவங்கள் பழசா இருந்தாலும் வசனத்தால மெருகேறி இருக்கு. காமடி லைன் உதவியா இருக்கு.சண்டை , ஆடல் காட்சிகள் தூள். ரசிகர்களின் ரசனைக்கேற்ப காற்றில் ஆட்களை உருட்டி விடுகிறார்கள்.!!!
ராதா ரவி வட்டி வியாபாரி.நாணயமான அப்பச்சி.,
ரோபோ சங்கர்,பாலசரவணன் ,மாரிமுத்து , ஆடுகளம் நரேன் ,வேல.ராமமூர்த்தின்னு கூட்டம் பெரிசு . செலவு அதிகம்.!
சூப்பர் குட் பிலிம்ஸுக்கு இது 90 ஆவது படம். தமிழ்ச்சினிமாவுக்கு அதிக அளவு புதியவர்களை கொடுத்த நிறுவனம். 100 அடிக்க வாழ்த்துவோம்.
சரி படம் எப்படி ?
தப்பு பண்ணாதுன்னு நம்பலாம்.!












