Wednesday, January 20, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

என்பட ஹீரோக்கள் தான் எனக்கு ரஜினி,கமல் ; இயக்குனர் பூபதி பாண்டியன்!

admin by admin
January 21, 2018
in News
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

என்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்.

You might also like

திமுகவுக்கு மகிழ்ச்சி,அதிமுகவுக்கு அதிர்ச்சி! ஸ்டாலின் 162 : பழனிசாமி 64

“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!

போலீஸ் படத்தில் பிக்பாஸ் ஆரி !

இப்படி ஒரு குடும்ப படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருமே தவறாமல் அவ்வபோது குடும்பக்கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார்கள். அதனால் தான் அங்கே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து என்ஜாய் பண்ணி படம் பார்க்கிறார்கள். அந்த சந்தோஷ மனநிலை தான் அவர்களை இன்னும் நான்கு படங்களை கூடுதலாக பார்க்க வைக்கும். குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஒரு சின்ன நடிகர் சொல்வதைவிட ஒரு பெரிய நடிகர் சொல்லும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல இங்கே தமிழிலும் முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு குடும்ப படம் நடித்தால், நம் தமிழ்சினிமாவை அசைத்துக்கொள்ள முடியாது.

இந்தப்படத்தின் நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம். இந்த கதையுடன் அவர் ஒன்றிப்போனதால் தான் சார் உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்க்க விரும்புகிறேன் என்றார்.. இந்தப்படம் வெளியானதுமே நீ பிசியாகிடுவேம்மா.. அப்புறம் இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்காதும்மா என அவரிடம் சொன்னேன். சும்மா விளையாட்டாகத்தான் சொல்கிறார் என நினைத்தால் படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையிலேயே அதை ஓப்பனாக சொன்னார்.

ஆனந்தி பற்றி சொல்லும்போது இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. படத்தில் ஆனந்தி உணர்ச்சிகரமாக பேசி அழுதுகொண்டே நடிக்கவேண்டிய காட்சி.. அந்தக்காட்சியை படமாக்கும்போது இணை இயக்குனர் ஒருவர் வசனத்தை சொல்லிக்கொடுத்தபடி ஆனந்தியும் நடித்துக்கொண்டிருந்தார். காட்சியை படமாக்கி முடிக்கும்போது பார்த்தால் அந்த உதவி இயக்குனரும் அழுதுகொண்டே இருப்பதை பார்த்தேன். அப்புறம் தான் தெரிந்தது அவர் அந்த காட்சியை யதார்த்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தானும் கிளிசரின் போட்டுக்கொண்டார் என்பது.

இந்தப்படத்தில் ஜாக்ஸ் பிஜாய் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். எனது படங்களில் யுவன் சங்கர் ராஜா, இமான், மணிசர்மா என பல இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகிவிடும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் யாருடனும் எந்த மனஸ்தாபமும் இல்லை.. எல்லோருடனும் இப்போதும் நட்பாகவே இருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து விடுகிறது.

இந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்.. ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்த கதையை பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதை தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும். பிரபு சார் இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.

இதில் சரண்யாவுக்கு மட்டும் தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டும் தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் என கூறினேன்.. அவரும் சூப்பர்..சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையில் நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன என்றாலும், இதுவரை என்னுடைய படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்ஷியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே எனக்கு மிகப்பெரிய கொடுப்பினை. எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.

Previous Post

‘காலா’ படத்தின் டப்பிங் சென்னையில் தொடங்கியது!

Next Post

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

admin

admin

Related Posts

திமுகவுக்கு மகிழ்ச்சி,அதிமுகவுக்கு அதிர்ச்சி! ஸ்டாலின் 162 : பழனிசாமி 64
News

திமுகவுக்கு மகிழ்ச்சி,அதிமுகவுக்கு அதிர்ச்சி! ஸ்டாலின் 162 : பழனிசாமி 64

by admin
January 19, 2021
“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!
News

“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!

by admin
January 19, 2021
போலீஸ் படத்தில் பிக்பாஸ் ஆரி !
News

போலீஸ் படத்தில் பிக்பாஸ் ஆரி !

by admin
January 19, 2021
சாமி கும்பிடும் இடத்தை இடித்ததாக நடிகர் விமலிடம் போலீஸ் விசாரணை.!
News

சாமி கும்பிடும் இடத்தை இடித்ததாக நடிகர் விமலிடம் போலீஸ் விசாரணை.!

by admin
January 19, 2021
மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”
News

மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”

by admin
January 19, 2021
Next Post
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!

“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!

January 19, 2021
போலீஸ் படத்தில் பிக்பாஸ் ஆரி !

போலீஸ் படத்தில் பிக்பாஸ் ஆரி !

January 19, 2021
சாமி கும்பிடும் இடத்தை இடித்ததாக நடிகர் விமலிடம் போலீஸ் விசாரணை.!

சாமி கும்பிடும் இடத்தை இடித்ததாக நடிகர் விமலிடம் போலீஸ் விசாரணை.!

January 19, 2021
மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”

மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”

January 19, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani