உலகநாயகன் கமல் சினிமாவும் அரசியலும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியோ சினிமாவே சரணம் என்று கார்த்திக் சுப்பராஜுடன் கை கோர்த்து அசத்தி வருகிறார். ரசிகர்களும் தலைவர் எப்போது பச்சைக்கொடி ஆட்டுவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருவருக்கும் நடுவில் ஓசை இல்லாமல் தளபதியின் அரசியல் வேலைகள் நாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறது.இவ்வளவு பரபரப்பான சூழலில் ………?
இவர்களைப் பற்றி தமிழ்ச்சினிமா முன்னணி முகம் என்ன சொல்கிறது?
கார்த்தி உங்க கமெண்ட்ஸ்?
“கிராமம் நகரம்னு சினிமா ஷூட்டிங்குக்காக போகிற இடமெல்லாம் எனக்கு ஜனங்க அவ்வளவு ஆதரவா அன்பா இருக்காங்க இவ்வளவுக்கும் 16 படங்கதான் பண்ணிருக்கேன்.அவங்க எத்தனை படம் பண்ணிருக்காங்க.எத்தனை வருஷமா இருக்காங்க.அவங்களுக்கு எவ்வளவு ஆதரவு அன்பு இருக்கும்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?
அவங்க பார்க்காத காசா பணமா? பேரும் புகழும் கொடி கட்டி பறக்கிறாங்க. அவங்க அரசியலுக்கு வந்துதான் புகழ் அடையனும்கிறது இல்ல. பதவி, அரசியல் இதெல்லாம் முள் படுக்கை முள் கிரீடம் மாதிரி! அவங்க வந்தா நிச்சயம் நல்லது பண்ணுவாங்கன்னு நம்புறேன். வர்ற பார்லிமென்ட் எலக்சன்ல நிப்பாங்கன்னு எதிர்பார்த்து காத்திட்டிருக்கிறோம்” என்கிறார் சின்னவர் கார்த்தி!