யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகைகள்.
‘வெடி’என் வழி தனிவழி,’ ‘பயணம் ,’உன்னைப்போல ஒருவன்’என இன்னும் சில படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். “சினிமா வாழ்க்கையில் கதாநாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஆனால் கதாநாயகிகள் அப்படியல்ல.வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டு இருக்கவேண்டியதாக “வருத்தப்பட்டிருக்கிறார்.
அவர் சந்தித்த துயரமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். “ஒரு நாள் மிகப்பெரிய புரொட்யூசர் என்னுடைய வீட்டுக்கு வந்தார்,சந்தோஷமாகப் பேசினார். என்னை அவரது வீட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்,நானும் அவ்வளவு பெரிய தயாரிப்பாளர் அழைக்கும்போது போகாமல் இருக்கலாமா? மேலும் எனது நடிப்பைப் பாராட்டி பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வைப்பதாக சொல்கிற அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா என்றுஎனது அம்மாவுடன் அவரது வீட்டுக்குப் போனேன். முகம் கறுத்து விட்டது.கடுகடுவென பேசினார்.நான் தனியாக வருவேன் என எதிர்பார்த்திருந்திருப்பார் போலும்! வெற்றிகரமான நடிகைகளும் இப்படிப்பட துயரங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
கதாநாயகர்கள்தான் அதிர்ஷ்டசாலிகள். தகுந்த வயதில் அவர்களால் கல்யாணம் செய்ய முடிகிறது.ஆனால் நடிகைகளுக்கு தகுந்த வயதில் கல்யாணம் செய்யமுடிவதில்லை. அப்படி செய்து கொண்டால் சினிமா வாழ்க்கை அத்துடன் முடிந்து விடும். தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து நடிக்க வேண்டியதாக இருக்கிறது” என்கிறார்,
உண்மைதான்!