உத்திரப் பிரதேசம். பல்ஹோரா கிராமம். புருசன் பெயர் அர்ஜுன். பொஞ்சாதி பெயர் கீதா.
” ஏன்டி, ஞாயித்துக்கெழமை வீட்டை விட்டு போனவ அஞ்சு நாள் கழிச்சு வரே ,எங்கேடி போனே?”
” ஊருக்கு!”
“எந்தூருக்கு?”
“சொல்லித்தான் ஆகணுமா, பரேலிக்குப் போனேன். ”
“அங்கே யார்டி இருக்கா?”
“சொந்தக்காரங்க !”
“அப்டியா? உங்கூட இங்க வந்தானே ,அவன் யார்டி? ஒன்னை சொந்தங் கொண்டாடுனவனா?”
அவ்வளவுதான் ! சண்டை கைகலப்பாகியது .கீதாவின் மீது பாய்ந்து மூக்கைக் கடித்து துப்பி விட்டான் அர்ஜுன். மனைவி ஆஸ்பத்திரியில். புருசன் போலீஸ் காவலில்!