முக்கால் வாசி படம் முடிஞ்சாலும் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கல .இது கோலிவுட்டின் புதிய டிரெண்டிங் ஆக இருக்கிறது.இதற்கு ஹரிஷ் கல்யான் மட்டும் விதிவிலக்கா?
யுவன்சங்கர்ராஜாவின் பியார் பிரேமம் காதல் படத்தை தொடர்ந்து,ஹரிஷ் கல்யாண் ,புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும்புதிய படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.இதுவும் ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக உருவாகிறது என்கிறது படக்குழு.
இது குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது “புதிய முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை.
ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும்.
ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன், மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது .இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.