விஞ்ஞானிகளும் அறிவியலார்களும் சொல்வதைப் பார்த்தால் அச்சம் உச்சியில் நிற்கிறது. கடல் மட்டம் உயர்ந்து விட்டதாம்!
பருவ நிலை மாற்றத்தால் தென் சீனத்தின் மகாயூ கடலில் ஒன்னரை அடி முதல் மூணு அடி வரை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் 8.8 ரிக்டர் அளவுக்கு ( யே…அய்யா!) கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்படும் பேரபாயம் இருக்கிறது.
பிலிப்பைன்சில் மணிலாவில் தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படும் என்று வர்ஜீனியா ராபர்ட்ஸ் என்கிறஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு சொல்லி இருக்கிறது. இது மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது.
நம்மூர் வாக்கியப் பஞ்சாங்கம் சொல்லியபடி நடப்பு ஆண்டில் அழிவு ஏற்பட்டிருக்கிறது.!பஞ்சாங்கமும் பலிச்சிருக்கு ! விஞ்ஞானம் என்ன முடிவு காட்டப்போகுதோ?