படத்தைப் பார்த்ததுமே பகீர் என்கிறது! கண்டிப்பாக இது பெண்ணியம் சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று பொறி தட்டுகிறது. அமலாபாலுக்கு மட்டுமல்ல ,ரசிகர்களுக்கும் வித்தியாசமான கதைக்களம்தான் என்கிறார் இயக்குநர் இரத்னகுமார்,
மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவரின் அடுத்த படம்தான் ஆடை! உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளாராம் .
“இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடைஎன்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.
நாயகி அமலாபால் கூறுகையில்,”ஆடை” படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. “ஆடை” சாதாரண படமும் அல்ல.இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும். இயக்குனர் ரத்னகுமாரின் மேயாத மான் பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது.அவ்வளவு உணர்ச்சிகரமான கதை ” என்கிறார் அமலா பால்.
சரிங்க மேடம். உங்களுக்கும் நயனுக்கும் ஆரோக்கியமான போட்டி ஆரம்பமாகுது.ரசிக்கிறோம்.
“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . இப்படத்தை வி.-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்