இயக்குநர்: சாய் சேகர். இசை : எஸ்.எஸ்.தமன்,ஒளிப்பதிவாளர் : ஏகாம்பரம்,
சித்தார்த்,கேத்தரின் தெரசா ,மதுசூதன்,நரேன்,மனோபாலா,மயில்சாமி,
************
ஆவியாக வந்து அநியாயம் செய்கிறவர்களை வதம் பண்ணுகிற பழைய பாஃர்முலா. கலப்படம் செய்கிறவர்களுக்கு தலைமை அதிகாரியே துணை போகும் பழைய சோத்தை இன்னும் எத்தனை படங்களில் பரிமாறுவார்களோ!!
முதல் பாதியில் கேத்தரின் தெரசாவுக்கு வாசனையை முகரும் திறன் இல்லை. செத்து நாறிக் கிடக்கும் நாயின் துர்நாற்றத்தைக் கூட உணர முடியவில்லை. புதுசா இருக்கேன்னு சொல்றீங்களா ! அதுக்காக அம்மாவையே சாகடிச்சிருக்காங்களே ! நுகரும் சக்தி பின்னர் வந்து விடும்.அந்த சக்தி இல்லாததால் கதைக்கு என்ன ஊட்டம் என்பது தெரியவில்லை.ஆனால் நகர்த்த உதவி இருக்கிறது.
டீத் தூளில் கலப்படம்.,எண்ணெய்யில் கலப்படம் ,பாலில் கலப்படம் இப்படி கலப்படங்களை பட்டியலிட்டு அதனால் வரக்கூடிய கேன்சர் உள்ளிட்ட பேராபத்துகளை சித்தார்த் பட்டியலிடுகிறார் . பயம் வருகிறது.எத்தகைய ஆபத்துகளை தினமும் வரவு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற அச்சம். ஆனால் அதற்குரிய தீர்வுதான் தெரியவில்லை.படத்திலும் ஆவியைக் காட்டி சரிக்கட்டிவிடுகிறார்கள்.
கேத்தரின் தெரசாவுக்கு வழக்கத்துக்கு மாறான வேடம். ஆவியாக அலைகிற சித்தார்த் தனது உடலில் புகுந்து கொலைகளை செய்வதை அனுமதிக்க மாட்டேன் என கெஞ்சி கதறுகிற காட்சியில் மட்டும் தெரசா நினைவில் நிற்கிறார். கேத்தரினுக்கு பின்னணி குரல் சரியாகப் பொருந்தவில்லை.
இடைவேளைக்குப் பின்னர்தான் சித்தார்த்துக்கு முழு நேர வேலை. கலப்படத்துக்கு எதிரான ஆதாரங்களை பக்காவாக பதிவு செய்து வைத்திருக்கிற அவர் தனது தலைமை அதிகாரியே கலப்பட புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்கிற ஆதாரம் கிடைத்த பிறகும் அதை மேலிடத்துக்கு அனுப்பாதது நெருடல். சண்டைக்காட்சிக்கான சமரசம் அது . சித்தார்த் ஆவியாவதற்காக வலிய சென்று மாட்டியதைப் போல இருந்தது.
ஏகாம்பரத்தின் கேமரா பலம் .பின்னணி இசை பலவீனம்.டல்லடிக்கிது.
சினிமா முரசத்தின் மார்க் : 2 / 5