நயன்தாராவிற்கு இரண்டு முன்னாள் காதலர்கள், தற்போதைய காதலன் என மொத்தம் மூன்று காதலர்கள் இருப்பது உலகம் அறிந்ததே. நயன்தாராவின் பிறந்தநாள் இன்று. #HBDLadySuperstarNayanthara என்ற ஹாஷ்டாக் மூலம் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி சமூகவலைத்தளங்களை அதிரவைத்துள்ளனர். இந்நிலையில் நயன்தாரா ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் காதலனை பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அவருடைய இருக்கையில் தினமும் ஒரு காதல் கடிதமும், அதன்மேல் ஒரு ரோஜா பூவும் இருந்ததாம். முதல் இரண்டு நாள் ஒன்று செய்யாமால் விட்டுவிட்டாராம். மூன்றாவது நாளும் அதேபோல் காதல் கடிதம் இருந்ததாம். உடனே தன்னுடைய பெற்றோரிடம் இதைக்கூறியுள்ளார். அவர்கள் உடனே தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு இதுபற்றி புகார் தெரிவித்தனராம். தலைமையாசிரியர் விசாரணை செய்ததில் காதல் கடிதம் வைத்தது ஏழாம் வகுப்பு மாணவன் என தெரியவந்ததும் அவனை கண்டித்தாராம் தலைமையாசிரியர். அதன்பின் அந்த மாணவன் நயன்தாராவை திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதை என்னால் மறக்கவே முடியாது என நயன்தாரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முதல் காதலன் யாருன்னு சொல்லிடீங்க… இப்போ விக்னேஷ்சிவன் உங்களோட எத்தனையாவது காதலர்னு சொன்னா தெளிவாயிடுவாங்க உங்க ரசிகர்கள்…