நடிகை ரம்யா பாண்டியனின் பெயரில் வெளியான வலைதள பக்கத்தில் அவரது அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியானது. இது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் ரம்யாபாண்டியன் பட வாய்ப்புக்காக இந்தளவு இறங்கிவிட்டாரே என தங்களது கோபத்தை கண்டனமாக தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்து ரம்யா பாண்டியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த அரை நிர்வாண புகைப்படம் என்னுடையது அல்ல, போலியானது அந்த சமூகவலைதள பக்கமும் போலியானது. என்னுடைய உண்மையான வலைதள பக்கம் இதுவே எனக்கூறி அவரது ஒரிஜினல் சமூக வலைதளப் பக்கத்தின் விபரங்களையும் தெரிவித்திருக்கிறார்.
— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2019