சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் அவதிக்கு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வீடு அருகே குளம் போல் தேங்கிய மழை நீரில் படகில் பாட்டு பாடிக்கொண்டேசெல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக வருகிறது.
அந்த வீடியோவில் மன்சூரலிகான், “தமிழ்நாட்டில பொறக்கணும்,
சென்னையில தண்ணியில மிதக்கணும்
பொறந்தா தமிழனாக பொறக்கணும், சென்னையில கார் ஓட்டி மகிழணும் என கிண்டலாக பாடி கொண்டே படகில் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது