அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்தது மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய தேசிய இன மக்கள் வசிக்கும் 2 மாகாணங்களை இறைமையுள்ள சுதந்திர பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் போன்றவற்றை முன்வைத்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
கடந்த 2 வாரங்களாக நீடித்து வரும் இந்த போரில். உக்ரைனில் இருந்து பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அடுத்தடுத்து விதித்து வருகின்றன.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,”போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும்.குண்டு விழா நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும்.ஆயுதம்,மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்.போரை நிறுத்துங்கள் புதின். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.