
குழந்தைகள் தூங்குவதற்காக கதை சொல்லுகிற பாட்டிகள் மறைந்து வெகு காலமாகிவிட்டாலும் பாட்டிகள் விட்டுப்போனதை சொல்லுவதற்கு இன்றும் சிலர் இருக்கிறார்கள்.
அவர்கள் , தற்காலத்திய இயக்குநர்கள் சிலரே! குறிப்பிடத்தகுந்தவர் டீகே !!!
காட்டேரியின் முன்னோட்ட விழாவில் கிடா விருந்து போட்டு அசத்திய தயாரிப்பாளர் கே,இ,ஞானவேல் ராஜாதான் படத்தின் தயாரிப்பாளர்.
அன்று அவ்வளவு பெரிய அளவுக்கு விருந்து போட்டதற்கு காரணம் படம் பார்க்கும்போதுதான் புரிந்தது. சரமாரியான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நம்மை தயார் படுத்துகிறார் என்பது.!அப்பப்பா கொலைக்குத்துய்யா!
வைபவ் , மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி செல்கிறார்கள். சென்றடைந்த கிராமத்தில் ஒருத்தன் கூட உயிருடன் இல்லை. 
இங்கிருந்து தப்பித்தார்களா ,அல்லது அவர்களும் பேய்களாகி சங்கமித்து விட்டார்களா என்பதை கழுத்தை கடித்து உதரம் குடித்தபடியே சொல்லியிருக்கிறார் இயக்குநர் டீகே !!!
வைபவ்.சும்மாவே இவர் நடிப்புத்திலகம். விட்டு வைப்பாரா படத்தை.!
சோனம் பாஜ்வா,ஆத்மிகா இருவரும் நடிப்பதற்காக காட்சிகளை தேடி அலைவது
போலிருக்கிறது.பாவம்யா!
கருணாகரன் ,ரவிமரியா இருவரும் தற்போது நடிப்பு ராசாக்களாக மாறி வருகிறார்கள். தர்ம அடி கொடுக்கிறார்கள்.தாங்க முடியல சாமியோவ்!
வரலட்சுமி சரத்குமாருக்கு இந்தப்படம் எதற்கு என்று கேட்க வைக்கிறது
ஜான்விஜய், வழக்கமான பாணியில் பேசி நடித்து விடுகிறார்.
பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு உவர் நிலத்துக்கு நீர் பாய்ச்சியது மாதிரி.
இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.பேய்ப்பட பயில்வான்.!
காட்டேரி கெடா விருந்து சாப்பிட்டவங்க தாங்கிக்கிட்டாங்க. மத்தவங்க ..ஓ மை காட்!












