கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘காட்டாளன்’. இதில் கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ், கதாநாயகியாக துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன், சுனில், கபீர் துஹான் சிங், ‘புஷ்பா’ புகழ் ராஜ் திரண்டாஜ் , பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் – பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைக்கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார் . புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். காட்டாளன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
‘காட்டாளன்’ படத்தின இயக்குநர் பால் ஜார்ஜ், ’கே.ஜி.எப்’ ‘புஷ்பா’ போன்ற படங்களின் மூலம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறார். என்பதை அவரது இந்தப் படம் உறுதி படுத்தியிருக்கிறது. அதே சாயலில் ஒரு முழுமையற்ற படைப்பாக , நேர்த்தியற்ற திரைக்கதையில்!
கபீர் துகான் சிங், சுனில் இருவரும் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் இரண்டு கும்பல்களின் தலைவர்கள். ஒரு கடத்தலின் போது இருவருக்கும் மோதல் உருவாகிறது. சுனில், ஆண்டனி வர்க்கீஸ் உதவியுடன் கபீர் துகான் சிங்கிற்கு தெரியாமல், இலங்கைக்கு தந்தங்களை கடத்துகிறார். இதனால், சுனில் மீதும் ஆண்டனி வர்க்கீஸ் மீதும் கபீர் துகான் சிங்கிற்கு கோபம் உண்டாகிறது. நாட்கள் சென்ற நிலையில், கபீர் துகான் சிங், சுனில் இருவரும் சேர்ந்து ஆண்டனி வர்க்கீஸை கொல்ல முடிவு செய்கின்றனர். ஏன், எதற்கு? என்பது தான், காட்டாளன்.
குழுக்களுக்கிடையே சண்டை உருவாகும் போது யாராவது ஒருவர் ஜெயிக்க வேண்டும். என்ற உந்துதல் ரசிகருக்கு ஏற்பட வேண்டும். இதில் அவ்வாறு ஏற்படவில்லை. என்பது தான் இந்தப்படத்தின் பெரிய மைனஸ். சர்வ சாதரணமாக கடத்தலை செய்கின்றனர். அதோடு ஏற்றுக்கொள்ளப்படாத காட்சியமைப்பு.
நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ், வில்லன்களாக நடித்திருக்கும் சுனில், கபீர் துகான் சிங் காட்சிகளுக்கேற்றபடி தங்களது உழைப்பினை கொட்டியிருந்தாலும் அது ரசிகர்களிடம் எநத பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை. இலங்கையைச் சேர்ந்தவராக துஷாரா விஜயன். வித்தியாசமாக அவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகியோரும் தங்களால் முடிந்தை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரெனாடைவ், காட்சிகளை பிரமாதப்படுத்தியிருக்கிறார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் ஓகே தான்.
மாஃபியா, யானைத் தந்தம் கடத்தல் என இண்டர்நேஷனல் லெவெலில் கதையை யோசித்தவர்கள் அதற்கான திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர். வலுவற்ற சென்டிமென்ட் காட்சிகளும், டிராமாவும் சுத்தமாக எடுபடவில்லை!
‘காட்டாளன்’ – சுவாரசியமில்லாதவன்!












