மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகியுள்ளது.இப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணைய தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,இப்படம் வெளியான நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர் அதன் லிங்க்குகளும் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. இதனால் படக்குழுவினரும்,தயாரிப்பு தரப்பும் பெரும் அதிர்ச்சியில் அடைந்துள்ளனர்