நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது ஜெய் பீம் திரைப்படம்.கடந்த . 2021ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான இப் படத்தை எழுத்தாளர் த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார்.
இதில், சூர்யாவுடன் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், இளவரசு, ராஜு முருகன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில்,இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன.
மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல் முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.” “திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.