
படத்தின் ஆழமான தாக்கம் மற்றும் கதைக்கான உத்வேகம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசியதாவது, “பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கரையில், ஒரு கடையின் முன்பு இரண்டரை வயது குழந்தை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. என் மனதை பாதித்த இந்த சோகமே ‘பலுங்கு’ திரைப்படத்திற்கான உத்வேகமாக அமைந்தது. இது போன்ற கொடுமைகளுக்கு எதிரான மோனிசெனின் கிளர்ச்சி மற்றும் அழுகைக்கு இப்போது பதினேழு வயது. துரதிர்ஷ்டவசமாக இன்றும், இந்த மாதிரியான சம்பவங்கள் அன்றாடம் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அழுகைகள் இழப்பையும் வலியையும் மட்டுமே எதிரொலிக்கின்றன” என்றார்.
இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் அடுத்து, பிரித்விராஜ் சுகுமாறன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்’ திரைபப்டம் உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று வெளியாக இருக்கிறது. ‘பலுங்கு’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.