முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (வயது 45). இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ரூ கொண்டிருந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து , சட்லெஜ் ஆற்றில் பாய்ந்தது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றியின் நன்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமி மாயமானார் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது இதையடுத்து கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வந்தது. . இந்நிலையில், இன்று 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், ஸ்கூபா டைவிங் வீரர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்தனர்
மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேதபரிசோதனைக்கு பின்னர் , வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.