டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருது பெற்று நேற்று நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் சென்னை திரும்பினார் சென்னை விமான நிலையத்தில் அஜித் குமாரை சூழ்ந்து கொண்டு,ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அஜித் குமார் ,” தனக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவேன்” என தெரிவித்தார். பின்னர் தொடர்ந்து ரசிகர்களும், செய்தியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டு சென்றதால் ஒரு நிமிடம் கோபமடைந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் அஜித் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் சிறிய காயம் தானே என நினைத்தவருக்கு நேற்று இரவு முதல் காலில் வலி அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் நடந்து வருவதாகவும் , சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. அஜித்குமார் நாளை தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.