தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு பெரும் புயலுக்குத் தயாராகி வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும், இளம் தலைவராகவும் அடையாளம் காணப்படும் கே.அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாக இணையத்தில் வெளியாகி வரும் செய்திகள் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.கடந்த சில வாரங்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தி வருகின்றன.
. பாஜகவின் முக்கிய தூணாகக் கருதப்பட்ட அண்ணாமலையின் இந்த திடீர் திட்டம் , தமிழக அரசியல் சமன்பாடுகளை முழுமையாக மாற்றியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகி மவுனம் காத்து வரும் நிலையில், தனிக்கட்சி தொடங்குவது குறித்து பரவி வரும் செய்திகள் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தீவிர அரசியல்வாதியாக களமிறங்கி பல அரசியல் கட்சியினரையும் அதிர வைத்த ஒருவர் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்ததற்கான காரணம் இப்போது தெளிவாகியுள்ளது என்றும் .அண்ணாமலை மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிக்கை அவருக்கும் பாஜக மேலிடத்துக்கும் இடையேயான ஆழமான விரிசலை வெளிச்சமிட்டது. கட்சியின் அடிப்படை கொள்கைகளிலேயே முரண்பாடு ஏற்பட்டதால், மேலிடம் போதிய ஆதரவு கொடுக்காததால் அண்ணாமலை தனக்கென தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.தனிக்கட்சி தொடங்கும் திட்டத்துடன் அண்ணாமலை அதிரடியான முதல் கட்ட நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் நேரடியாகப் நடிகர் ரஜினிகாந்தின் ஆசியுடன் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி கிழக்கில் போட்டிஇது மட்டுமல்லாமல், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காலியாக உள்ள இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தனது புதிய கட்சியின் சார்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.பூத் அளவில் ரகசிய வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அண்ணாமலையின் திட்டம் மிகவும் தீவிரமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தற்போது அண்ணாமலை நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று அவர் டெல்லி செல்ல உள்ளதாகவும் அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது விலகல் கடித்தை கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ,
சென்னை வந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முக்கிய சந்திப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.அவரது புதிய கட்சிக்கு ரஜினி முழு ஆதரவு அளிக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.ரஜினிகாந்த் மட்டுமின்றி, தமிழகத்தின் பல முக்கிய தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற ஐஏ எஸ் மற்றும் ஐபி எஸ் உயர் அதிகாரிகள், மற்றும் சில அரசியல் தலைவர்களும் அண்ணாமலைக்கு திரைமறைவில் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த ஆதரவு அவரது புதிய அரசியல் பயணத்துக்கு பெரும் பலத்தை அளிக்கும்.அண்ணாமலையின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்திய முக்கிய முகங்களில் ஒருவரான அண்ணாமலை இனி மாற்று சக்தியாக உருவெடுக்கப் போகிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்
அண்ணாமலை, வரும் ஜூன் 4 ம் தேதி தனது பிறந்த நாளில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆச்சரிய படுத்தும் என்கிறது அவரின் நெருங்கிய வட்டாரம்.இந்த அரசியல் மாற்றம், தமிழகத்தில் புதிய கூட்டணி சமன்பாடுகளை உருவாக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில்,புதிய அரசியல் கட்சி தொடக்கமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,”இன்னும் 2 நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் என புன்னகையுடன் கூறிவிட்டு விட்டு புறப்பட்டு சென்றார்
அண்ணாமலையின் தனிக்கட்சி தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அண்ணாமலையின் தனிக்கட்சி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே தெரிய வரும்.












