‘அங்கீகாரம்’ திரைப்படத்தினை எஸ்.கே.பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் தயாரித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் தென்பாதியான். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ் , இசபெல்லா, வசுந்தரா,சிந்தூரி , அஜித் கோஷி, ரமா, ரங்கராஜ் பாண்டே , மோகன்ராம், மன்சூர் அலிகான் , செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி. சங்கர், விமல்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னை, குடிசைப் பகுதியில் விளிப்புநிலையிலுள்ள நாயகன் கே.ஜெ.ஆர். தந்தையை இழந்த அவர், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார். சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள அவர் ஓட்டப்பந்தயத்தில் தனிக்கவனம் செய்து வருவதுடன், நேஷனல் லெவெலில் பல மெடல்களை குவித்து சாதனை படைக்கிறார். இவரை ஊக்குவிப்பதற்கு பதில் விளையாட்டு சங்கங்கள் புறக்கணிக்கின்றன. எப்படியாவது விளியாட்டுபோட்டியில் வெற்றி பெற்று அதன் மூலம் குடும்பத்தை வளப்படுத்த முயற்சிக்கும் அவரது கனவு வீனாகிறது. இப்படி பல போராட்டங்களுக்கிடையே தேசிய தடகளச் சங்கம் நடத்தும் போட்டியில் தேசிய அளவில் சாதனை புரிந்து வெற்றி பெறுகிறார். இந்த வெற்றிக்கு பிறகும் அவர் உதாசீனப்படுத்தப்படுவதோடு காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் அவர் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறார். இதனால் விரக்தியின் உச்சிக்குப்போகும் கே.ஜெ.ஆர்., அந்தப்போட்டிக்கு தடைகேட்டு கோர்ட்டுக்கு போகிறார். அதன் பிறகு இந்தியா முழுவதும் திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் விளையாட்டு வீரர்களின் குரலாக ஒலிப்பதே ‘அங்கீகாரம்’.
நாயகனாக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர், விளையாட்டு வீரருக்கான அத்தனை அம்சங்களுடன் திரையை ஆக்கிரமிக்கிறார். ஒரு ஓட்டப்பந்தய வீரர் எப்படி நடந்து கொள்வாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கிறார். தாயின் கஷ்டத்தை நினைத்து கவலைப்படும் போதும், தங்கையுடன் பாசத்துடன் பழகும் போது சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
இசபெல்லா, வசுந்தரா, ரமா, சிந்தூரி, ஷான், அருள் டி.சங்கர், மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே, மோகன் ராமன் உள்ளிட்டோரும் கதைக்கு ஏற்றபடி நடித்துள்ளனர். திரைக்கதையை நகர்த்துவதிலும் சரியான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.
ஓட்டப்பந்தயம் குறித்த நுனுக்கங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். கே.ஜெ.ஆர் ஓடக்கூடாது என்பதற்காக ஸ்டேஷனில் அவருக்கு கொடுக்கும் தண்டனை கவனிக்கத்தக்கது. அதாவது ஸ்குவாட் பொஷிஷனில் தொடர்ச்சியாக இருக்கும் போது, பின்னந்தொடை உள்ளிட்ட தசை நார்கள் கிழியும். அதனால் அடுத்த நாள் ஓட முடியாது. இப்படி சில விஷயங்களி சொல்லி படத்தை விளையாட்டு சார்ந்து காட்சிப்படுத்தியுள்ளனர். அதோடு இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்பது குறித்த காட்சிகளும் ரசிக்கத்தக்கது.
ஒளிப்பதிவினை, ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
தனது தனித்தன்மையை காட்ட முடியாமல் தடுமாறியிருக்கிறார்.
ஜிப்ரான் வைபோதா பின்னணி இசை, பலம் சேர்த்திருக்கிறது.
நீதிமன்ற வாத, பிரதிவாதங்கள் அப்பட்டமான சினிமாத்தனமாக படமாக்கப்பட்டிருப்பது தான் படட்தின் குறை. மற்றபடி எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் விளையாடுத்துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தி பதக்கங்கள் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணத்தை உரக்கச்சொல்லி இருக்கிறார். இதனால் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கலாம்.
மொத்தத்தில், ‘அங்கீகாரம்’ விளையாட்டுத்துறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது!












