ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், அந்த்ரன். சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார். இதில் பிரஜின், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மென், படத்தின் தயாரிப்பாளார் எம் கே சாம்பசிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஹரி எஸ். ஆர் இசையமைத்துள்ளார்.
எம் கே சாம்பசிவத்தின் ஒரே மகள் இவானா அருண். அவர் பிறந்த பின் செல்வாக்கமிக்க நபராகிறார், அவரது தந்தை இதனால் இன்னும் கூடுதல் பாசம். தன் பெண்ணை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் இவானா காதலிக்கும் பையன் கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
அதன் பிறகு பெற்றோர்களின் தொடர் வற்புறுத்தலால் திருமண ஏற்பாடு நடக்கிறது. நிச்சயதார்த்தம் நல்லமுறையில் நடக்கிறது. குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். இந்நிலையில் இவானாவிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் இறக்கிறார். குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்த திருமண ஏற்பாடு நடக்கிறது. அந்த மாப்பிள்ளையும் தற்கொலை செய்து கொள்கிறார். தொடர்ச்சியாக மரணங்கள் நடப்பதால் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. இவானா திருமணமே வேண்டாம். என்ற மன நிலைக்கு செல்கிறார். இந்த மரண சம்பவங்களை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி பிரஜின், இவானாவை விரும்புகிறார். பிரஜின் என்ன ஆனார்? தொடர் மரணங்களின் பின்னணி என்ன? என்பது தான், அந்த்ரன் படத்தின் மர்மக்கதை!
பிரஜின் காவல்துறை அதிகாரியாக அலட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நடித்திருக்கிறார். அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் நன்றாக நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளில் அவரது நடிப்பு திரைக்கதையை சுவாரசியமாக செல்ல வைக்கிறது. கொலையாளியை கண்டுபிடித்தவுடன் அவர் திகைப்படைவைதைப் போலவே ரசிகர்களும் திகைப்படைவது நிச்சயம். புதிதான கதைக்கரு! இயக்குநரை இதற்காகவே பாராட்டலாம்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில், தாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி , டாக்டராக அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என அவரவர் இருப்பினை பதிவு செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.
ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் பாடல்கள் ரசிக்கும்படியும், காட்சிகளின் விறுவிறுப்பை கூட்டுவதுமாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், வித்தியாசமான கதைக்கருவுடன் யூகிக்க முடியாத ஒரு மர்டர் மிஸ்ட்ரியை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘அந்தரன்’ – அதிர வைக்கிறான்!












