நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.சபாஷ் நாயுடு படமும் ஓரளவு முடிந்துவிட்டது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் அங்கு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,’தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவே கட்சி தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது எண்ணம். தமிழ்நாட்டை நாளைய தமிழர்களுடையதாக மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு அங்கும் இங்குமாக பணி செய்தோம். இனி அரசியலில் ஈடுபடுவதன் மூலம் மையத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்ர கேள்விக்கு பதிலளித்த கமல் கூறியதாவது,’தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை’. எனக் கூறியுள்ளார்