கடந்த சில மாதங்களாக தமிழக ஆட்சியாளர்களை கமல் விமர்சனம் செய்து வந்த நிலையில் தானும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன் என்று கூறினார். வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கவுள்ளார்.தனது அதிரடி அரசியல் அறிவிப்புக்கு பின்னர்,கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார் . கமலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னையில் சந்தித்தார். இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ,கமல்நே ரில் சந்தித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்தார் கமல். அப்போது ஆதர்ஷ தலைவர்களை தாம் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இடதுசாரிகள் மட்டுமின்றி அனைவரையும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு இன்று கமல் திடீரென வந்தார். அப்போது மதுரையில் 21-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.