கப்பல் மூழ்கி யாருமே தப்பவில்லை என்கிறபோது எங்கேயோ ஒரு குரல் ” நான் நனையக்கூட இல்ல !” என்கிற சத்தம் ஓங்கி ஒலித்தால் மகிழ்ச்சிதானே!
“வாய்ப்புக்காக வாலிபத்தை இரையாக கேட்கிறார்கள் “என்கிற ஓலம் தெலுங்குத் திரை உலகில் அரை நிர்வாணமுடன் ஆடிக் கொண்டு இருக்கிறது.
அதை எதிர்த்து நடிகர்கள் யாருமே முணுமுணுக்காதபோது பிரபல நாயகி நடிகை அவர்களுக்காக பின்னணி கொடுக்கிறார்கள் என்றால் அறிவாளி அந்த நடிகையா அல்லது நடிகர்களா?( சாவி கொடுப்பது )
தமிழ்க் கதாநாயக அப்பாவிகளான சூர்யா, கார்த்தி,சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங் உரத்து பேசுகிறார்.
“எனக்கு ஸ்ரீ ரெட்டி,மாதவி லதா ஆகியோர் யார் என்றே தெரியாது. அவர்கள் எந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் அவர்கள் சொல்வது மாதிரியான ‘அந்த ‘அனுபவம் எனக்கு இல்லை.அந்த அனுபவமே இல்லாதபோது அதைப்பற்றி எப்படி பேச முடியும்?நான் பொய் சொல்வதாக நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும்,எனக்கென்ன நட்டம்?இது சந்தர்ப்பவாத உலகம்!சினிமா என்பது வெளிச்சபூமி என்பதால் யார் சொன்னாலும் பளிச்சென தெரிகிறது” என்கிறார் ரகுல் பிரீத் !